ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டியிருந்த நிலையில் ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு அதிகளவில் திமுகவினர் வெற்றி பெற்று வருகின்றனர்.